News May 29, 2024
அழும்போது கண்களில் நீர் வருவது ஏன்? (2/3)

துக்கம், பயம், மகிழ்ச்சி ஆகிய நேரங்களில் கண்களில் நீர் பெருக்கெடுக்கும். அப்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒருபகுதி, கண்ணீரை கட்டுப்படுத்தும் மூளையின் இன்னொரு பகுதியான லிம்பிக்கிற்கு சிக்னல் கொடுக்கும். அது நரம்பு மண்டலத்தை தூண்டி, கண்களில் நீரை வரச் செய்யும். இதுபோன்ற அழுகையின்போது, கண்களுக்குள் சேமித்து வைப்பதைக் காட்டிலும் அதிக நீர் சில நிமிடங்களிலேயே வழிந்தோடும்.
Similar News
News September 6, 2025
TTV பேசியது பற்றி தனக்கு தெரியாது: நயினார் விளக்கம்

கூட்டணியை நயினார் நாகேந்திரன் சரியாக வழிநடத்தவில்லை என <<17628741>>TTV தினகரன்<<>> குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஏன் அப்படி சொன்னார் என தனக்கு தெரியாது என நயினார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவை பொறுத்தவரையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனவும், எந்த கட்சியையும் சிறிய கட்சி என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் சேர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.
News September 6, 2025
GST மாற்றத்தால் 3,700 இழப்பு: SBI கணக்கீடு

GST சீர்திருத்ததால் ஆண்டுதோறும் ₹48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது. ஆனால், அரசுக்கு ₹3,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும் என SBI மதிப்பிட்டுள்ளது. இந்த மாற்றங்களால் நுகர்வு அதிகரிக்கவும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றும் கூறியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வரி குறைப்பது, சில்லறை பணவீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

<<17629139>>செங்கோட்டையனை<<>> தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கூண்டோடு நீக்கி EPS அறிவித்துள்ளார். நம்பியூர் வடக்கு ஒ.செ.,(ஒன்றிய செயலாளர்) சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒ.செ., ஈஸ்வரமூர்த்தி, கோபி மேற்கு ஒ.செ., குறிஞ்சிநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தியூர் வடக்கு ஒ.செ., தேவராஜ், அத்தாணி ரமேஷ், ஈரோடு மண்டல IT விங் துணை செயலாளர் மோகன்குமார் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.