News May 29, 2024
திருப்பத்தூர்: சிக்கனமாக இருக்க அறிவுறுத்தல்

காவிரி கூட்டுக் குடிநீர் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பொதுமக்கள் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி வரும் 4ம் தேதி வரை நடைபெறுவதால் குடிநீர் குறைவாக விநியோகம் செய்யப்படும். இதனால் சிக்கனமாக குடிநீர் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 10, 2025
திருப்பத்தூர் காவல்துறை புதிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (10-09-2025) தனது சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் தங்களின் வாகனங்களை ஓட்டும்போது செல் போன் பயன்படுத்த வேண்டாம் என்றும் அப்படி பயன்படுத்துவதால் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது எனவே கவனமுடன் வாகனம் ஓட்டும் மறு அறிவுறுத்தி உள்ளது.
News September 10, 2025
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <