News May 29, 2024

இலவச தையல் பயிற்சிக்கு அழைப்பு!

image

மதுரையில் மத்திய, மாநில அரசின் நிதியுதவியின் கீழ் எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பெட்கிராட் நிறுவனத்தில் மகளிருக்கான 3 மாத கால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தது 8வது தேர்ச்சி பெற்ற 45 வயது வரையுள்ள ஏழைப்பெண்கள் பங்கேற்கலாம். சிறுபான்மை, எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் நேரிலோ அல்லது 89030 03090ல் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News September 11, 2025

BREAKING மதுரை: பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

image

எல்.கொட்டாணிபட்டி கிராமத்தில் நான்கு வழிச்சாலை அருகே பாதுகாப்பற்ற நிலையில் கிணறு ஒன்று உள்ளதாகவும், அதனை உடனடியாக மூட வேண்டும் என பேரையூர் வட்டாட்சியர் செல்லபாண்டியனிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் கிணற்றை இன்று மாலை ஆய்வு செய்ய வந்தபோது, கிணற்றில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 11, 2025

எங்கள் வழி தனி வழி – டிடிவி தினகரன்

image

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன்; தேவையென்பதை உணர வேண்டும். செங்கோட்டையன் உள்ளிட்ட யார் எடுக்கிற முயற்சியும் நடக்காது என்பது எனக்கு தெரியும். பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும். எங்கள் வழி தனி வழி நாங்கள் அமைகின்ற கூட்டணி தான் ஆட்சியில் அமர போகிற கூட்டணி என்றார்.

News September 11, 2025

மதுரை: தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிரடி..!

image

மதுரை மாநகராட்சி சுகாதாரதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை கார்ப்பரேஷன் வழங்கிய வெறிநாய் தடுப்பூசி மாநகராட்சி நிர்வாகம் நகரில் ஆயிரத்திற்கும் அதிகமான நாய்களுக்கு போடப்பட்டது. அடுத்தகட்டமாக மேலும் ஆயிரம் தெரு நாய்கள் கண்டறியப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடக்க இருக்கிறது. நகரில் 38 ஆயிரம் தெரு நாய்கள் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து தடுப்பூசி பணிகள் நடைபெறும் என்றார்.

error: Content is protected !!