News May 29, 2024

75 அதிநவீன குடைகள் வழங்கிய ராம்நாடு எஸ்பி

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்கள் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பணிபுரியும் நிலை உள்ளது. இதனை கருத்தில்கொண்டு காவலர்களுக்கு உதவும்விதமாக 13 நபர்கள் நிற்கக்கூடிய அளவிலான 75 அதிநவீன குடைகளை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்நேற்று காவலர்களுக்கு வழங்கினார்.

Similar News

News September 12, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய முகாம் விவரம்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கோரிக்கைகளாக பெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நாளை (செப்.13) நடைபெறுகிறது. மண்டபம் வட்டாரம் – மானங்குடி, பஞ்சாயத்து அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. ஆதார் அட்டை திருத்தம், குடும்ப அட்டை திருத்தம், பட்டா மாற்றம் போன்ற தங்களின் கோரிக்கைகளை முகாமில் மனுவாக அளிக்கலாம்.

News September 12, 2025

பரமக்குடி அருகே அரசு பேருந்துகள் மோதி விபத்து

image

பரமக்குடி அருகே மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருவரங்கி அருகே அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து, பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 12, 2025

ராமநாதபுரத்திற்கு வருகை தரும் செல்வ பெருந்தகை

image

வாக்கு திருட்டை தடுக்க அகில இந்திய மீனவர் காங். சார்பில் பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை திடலில் நாளை (13.9.2025) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் Ex. உள்துறை, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வ பெருந்தகை MLA ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஏற்பாடு செய்துள்ளார்.

error: Content is protected !!