News May 28, 2024

பத்மஸ்ரீ விருதை திருப்பி தர ஹேம்சந்தி மாஞ்சி முடிவு

image

தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர இயற்கை மருத்துவர் ஹேம்சந்தி மாஞ்சி முடிவெடுத்துள்ளார். சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தொலைதூர கிராமத்தில் மருத்துவ சேவையாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். இந்நிலையில், விருதை திருப்பி தர வேண்டுமென மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், விருதைத் திருப்பித் தருவதாகவும், மருத்துவப் பயிற்சியை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

Similar News

News September 6, 2025

CSK நிச்சயம் கம்பேக் கொடுக்கும்: கேப்டன் ருதுராஜ்

image

காயத்தால் 2025 IPL தொடரில் இருந்து வெளியேறிய பிறகு களமிறங்கிய மாற்று வீரர்கள் உடன், தானும் இணைந்து 2026 சீசனில் வெற்றி பெறுவோம் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். தோனியின் ஆதரவுடன் இது நிச்சயம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் கடைசி இடத்திற்கு CSK தள்ளப்பட்ட நிலையில், ஆயுஷ் மாத்ரே, பிரேவிஸ், உர்வில் படேல் ஆகியோர் உடன் சென்னை அணி கம்பேக் கொடுக்கும் என தோனி கூறியிருந்தார்.

News September 6, 2025

GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

image

GST வரி குறைப்​பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்​திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்​டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்​டு​களாக தூக்​கத்​தில் இருந்த மோடி அரசு, தற்​போது விழித்​துக்​கொண்டு ஜிஎஸ்​டியை மறுசீரமைத்​துள்​ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.

News September 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

error: Content is protected !!