News May 28, 2024

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எஸ்பி மீனா ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News

News December 1, 2025

மயிலாடுதுறை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 1, 2025

மயிலாடுதுறை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

மயிலாடுதுறை: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்!

image

கொள்ளிடம் ஒன்றியம் கீழவல்லம் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் -பவானி என்பவரது தொகுப்பு வீட்டின் முகப்பு சுவர் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் இன்று காலை இடிந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் சென்று பார்வையிட்டார். அவரிடம் கடந்த ஆண்டு ஆனந்தன் இறந்து விட்ட நிலையில் தற்பொழுது வீடு சேதமடைந்துள்ளதால் நிவாரணம் பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!