News May 28, 2024

கடந்த ஆண்டில் 27 லட்சம் சைபர் மோசடி புகார்கள் பதிவு

image

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், சைபர் மோசடிகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சைபர் மோசடிகள் குறித்த கண்காணிப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 27 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 99.5% காவல் நிலையங்கள் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Similar News

News March 7, 2026

₹6,600, ₹7,500.. தமிழக அரசு அறிவிப்பு

image

ரேஷன்கடை ஊழியர்களுக்கு 15% அடிப்படை ஊதியம், 55% அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் விற்பனையாளர்களுக்கு ₹7,500, கட்டுனர்களுக்கு <<19309935>>₹6,600 தொகுப்பூதியம்<<>> ஒரு வருடம் வழங்கப்படும். ஓராண்டுக்குப்பின், விற்பனையாளர்களுக்கு ₹39,600, கட்டுனர்களுக்கு ₹35,000 வரை காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும், 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.

News March 7, 2026

விஜய் – சங்கீதா விவாகரத்து.. புதிய ஆதாரம் வெளியானது

image

விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க முடியாது என வழக்கறிஞர் மூலம் தனக்கு மிரட்டல் வந்ததாக விஜய்யின் <<19319143>>மனைவி சங்கீதா<<>> செங்கல்பட்டு கோர்ட்டில் புதிய வழக்கு தொடுத்துள்ளார். அதில், தனக்கு நீதி கிடைக்கும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க உரிமை உள்ளதாகவும், பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், விஜய்யின் விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் பொது விவாதமாக மாறி வருகிறது.

News March 7, 2026

அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக: அதிமுக

image

சைதை துரைசாமியின் ‘மனிதநேயம்’ பயிற்சி மையத்தில் பயின்று வெற்றிபெற்ற மாணவர்களை ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வென்றதாக கூறி விளம்பரம் செய்வது வெட்கக்கேடு என அதிமுகவின் பாப்புலர் முத்தையா விமர்சித்துள்ளார். அடுத்தவர் உழைப்பில் குளிர்காயும் திமுக அரசு, விளம்பர அரசியல் செய்வதாக சாடிய அவர், மக்கள் வரிப்பணத்தை செலவழித்து பொய் விளம்பரம் செய்வதை விடுத்து, உண்மையான உழைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

error: Content is protected !!