News May 28, 2024

₹9000 கோடிக்கு பணம், நகை, போதைப் பொருள் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையில், நாடு முழுவதும் ₹9000 கோடி மதிப்பிலான பணம், நகைகள், போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 1 முதல் மே 18 வரை நடத்தப்பட்ட சோதனையில், 45% அளவுக்கு போதைப் பொருள்களும், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்றதாக ₹849.15 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ₹114.41 கோடியுடன் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது.

Similar News

News September 6, 2025

பாண்ட்யா சகோதரர்களின் நல்ல எண்ணம்

image

பாண்ட்யா சகோதரர்கள் செய்த நல்ல காரியங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தங்களது சிறுவயது பயிற்சியாளர் ஜிதேந்திர சிங்கிற்கு இருவரும் சேர்ந்து ₹80 லட்சம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஜிதேந்திர சிங் கூறும்போது, ₹20 லட்சம் மதிப்பில் கார், சகோதரியின் திருமணத்திற்கு ₹20 லட்சம், தாயின் மருத்துவ செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு ₹18 லட்சம் தந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

News September 6, 2025

மாணவர்கள் பையில் காண்டம்ஸ், கத்தி… அதிர்ச்சி!

image

அகமதாபாத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்களின் பைகளை பரிசோதித்த ஆசிரியர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம், பைகளில் நோட்டு புத்தகங்கள் தவிர காண்டம்ஸ், கருத்தடை மாத்திரைகள், ஆல்கஹால், ஆபாச புத்தகங்கள், பணம், ஆடம்பர பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் இருந்துள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம், சிறுவயதிலேயே ஆன்லைனில் தேவையில்லாத நிறைய விஷயங்களை குழந்தைகள் பார்ப்பதுதான் என உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

News September 6, 2025

இவைதான் இந்தியாவின் விலை உயர்ந்த விஷயங்கள்!

image

பொதுவாக உலகளவில் பிராண்டட் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அவை சற்று மாறுபடுகின்றன. இங்கு கழுதைப்பாலில் தொடங்கி தேயிலை வரை, அதன் சிறப்புத் தன்மை காரணமாக அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அந்தவகையில், இந்தியாவில் அதிகவிலை கொண்ட பொருள்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்தியதை கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!