News May 28, 2024
அண்ணாமலையாருக்கு1008 கலச அபிஷேகம்

தி.மலை அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார் திருக்கோவில் அக்னி தோஷ நிவர்த்தி இன்று (28.05.2024) நான்காம் கால யாக பூஜை நிறைவுபெற்று கடம் புறப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மூலவருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News July 5, 2025
திருவண்ணாமலை வழக்குகளை முடிக்க சூப்பர் வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட சமரச மையத்தின் சார்பாக நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க 90 நாட்கள் தொடர்ச்சியாக சமரசத்திட்டம் நடைபெற உள்ளது. ஜுலை 1 முதல் வாரத்தின் 7 நாட்களிலும் தி.மலை, ஆரணி, செங்கம், செய்யாறு, கலசப்பாக்கம், போளூர், தண்டராம்பட்டு, வந்தவாசி சமரச மையங்களில் சமரச திட்டம் நடைபெறுகிறது. இதன்மூலம் தீர்வு காணப்படும் வழக்கில் வழக்கு கட்டணத்தை முழுமையாக திருப்பி பெறலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*
News July 5, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 4, 2025
திருவண்ணாமலையில் 127 போலீசார் பணியிட மாற்றம்

தி.மலை மாவட்டத்தில் 127 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து 63 காவலர்கள் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றிய 64 ஏட்டுகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.