News May 28, 2024

கல்குவாரி விபத்தில் 15 பேர் பலி

image

மேகாலயா மாநிலம் அய்ஸ்வால் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு கல்குவாரி மீது விழுந்ததில், கற்கள் சரிந்து விழுந்து 15 பேர் பலியாகினர். மேலும் பலர் குவாரிக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் கற்கள் விழுந்துக் கிடப்பதால் அய்ஸாவாலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடக்கிறது.

Similar News

News March 24, 2026

வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

image

ஆபரணத் தங்கம் விலை <<19461962>>சவரனுக்கு ₹2,720<<>> குறைந்த நிலையில், வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹240-க்கும், கிலோ வெள்ளி ₹2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை நேர வர்த்தகத்தில் கிலோவுக்கு ₹15,000 குறைந்து ₹2,35,000-க்கு விற்பனையானது. பின்னர், இரவில் ₹15,000 அதிகரித்த நிலையில், மீண்டும் ₹10,000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

News March 24, 2026

மக்களை காக்க PM முதலில் தயாரா? CM ஸ்டாலின்

image

மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து மக்களை காக்க பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என CM ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் PM மோடி பேசியதை விமர்சித்த அவர், மக்களை காக்க நீங்கள் முதலில் தயாரா என கேட்டுள்ளார். மேலும், தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 24, 2026

ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்.. முதலீட்டாளர்கள் நிம்மதி!

image

பெரிய சரிவுக்கு பிறகு பங்குச்சந்தைகள் இன்று சற்று மீண்டுள்ளது. சென்செக்ஸ் 844 புள்ளிகள் உயர்ந்து 73,525 புள்ளிகளிலும், நிஃப்டி 262 புள்ளிகள் உயர்ந்து 22,775 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் சுமார் ₹15 லட்சம் கோடியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!