News May 28, 2024
ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவர்கள்

விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான ரக்பி போட்டியில் பங்கேற்றனர். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் நடைபெற்ற போட்டிகளில், இப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, வெற்றி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்கள் குழுவினர், விழுப்புரத்தில் ஆட்சியில் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பழனியை நேற்று (மே 27) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Similar News
News July 6, 2025
விழுப்புரம்: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்த கையேடு!

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் (ம) தகவல் கையேடு வழங்கும் பணி 07.07.2025 முதல்
தொடங்கவுள்ளது. தொடர்ந்து 15.07.2025 முதல் முகாம்கள் நடைபெறவுள்ளது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்துள்ளார்.
News July 6, 2025
கால் மாற்றி அறுவை சிகிச்சை விசாரணைக்கு உத்தரவு

விழுப்புரம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த நடத்துநர் மாரிமுத்துவிற்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு விசாரணை செய்ய இன்று ஜூலை 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
News July 6, 2025
மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்

மகளிர் உரிமை தொகை பெற நாளை ஜூலை 7 முதல் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் உள்ள தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.