News May 28, 2024
விருதுநகர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்திலிருந்து பல்வேறு வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு சட்ட விரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.எனவே சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் கூறியுள்ளார்.
Similar News
News October 13, 2025
விருதுநகர்: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <
News October 13, 2025
ராஜபாளையத்தில் கடித்து குதறிய கரடி

ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்து(45) ராஜபாளையத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள நிலாப் பாறை காட்டுப்பகுதியில் காவலர்களுடன் ரோந்து சென்ற போது கரடி ஒன்று இவரை தாக்கி தொடைப்பகுதியில் கடித்து குதறியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கரடியை விரட்டிய நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News October 13, 2025
விருதுநகரில் ஒரு வாரத்தில் அகற்ற கெடு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்கம்பங்கள், மின் வாரியத்திற்கு சொந்தமான உடைமைகள் மீது கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள், விளம்பர தட்டிகளால் ஊழியர்களால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் இதனால் மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு வாரத்திற்குள் இவை அனைத்தையும் அகற்ற வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.