News May 28, 2024

நெல்லையில் அரசு பேருந்துக்கு அபராதம்

image

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் நேற்று (மே 27) அபராதம் விதித்துள்ளது. மூன்றடைப்பு முப்புடாதி என்பவர் நெல்லையிலிருந்து ஊருக்கு செல்லும்போது அரசு பேருந்து நடத்துநர் வள்ளியூர் டிக்கெட்டை வழங்கி பின் மூன்றடைப்பில் நிற்காமல் சென்றதால் தொடர்ந்த வழக்கில் நாகர்கோவில் அரசு பேருந்து கிளை மேலாளர், நடத்துநருக்கு ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News September 15, 2025

நெல்லை உழவர் நல சேவை மையம் அழைப்பு

image

நெல்லை மாவட்டத்தில் 30 சதவீத மானியத்தில் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் படித்த இளைஞர்கள் முன் வரலாம். தகுதியானவர்கள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.

News September 15, 2025

நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

image

புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நவதிருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன இதன்படி வருகிற 20, 27 அக்.4, 11 ஆகிய நாட்களில் காலை 6 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும். சென்று திரும்பி வருவதற்கு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.500 புதிய பஸ் நிலையத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

News September 15, 2025

சுத்தமல்லியில் அரசு பள்ளியில் மாணவர்கள் மோதல்

image

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பைச் சேர்ந்த 13 மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறுவர் சிறப்பு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், பள்ளிகளில் ஏற்படும் வன்முறை சம்பவங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

error: Content is protected !!