News May 28, 2024
திருவள்ளூர்: பைக் திருடிய சிறுவன் கைது

திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் திருடியது என தெரியவந்தது. விசாரணையில் வி.சி.ஆர்.கண்டிகையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் குடிப்பதற்கு பணம் தேவைப்படும்போது இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்துள்ளது தெரியவந்துள்ளது. சிறுவனை கைதுசெய்த போலீசார் திருவள்ளூர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
Similar News
News August 28, 2025
திருவள்ளூரில் அரசு வேலை.. 80 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள 2,581 உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் திருவள்ளூரில் 80 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 18-50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.19,850- 96,395 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு<
News August 28, 2025
திருவள்ளூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர், ரோஜா தெரு பகுதியில் நேற்று காலை சாலையில் நடந்த சென்ற சிறுவன் நிஷாந்தை (6) தெரு நாய் துரத்தி அவரது கால், கைகளில் கடித்துள்ளது. பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
News August 28, 2025
திருவள்ளூர்: பெண் பிள்ளை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மூலம் பெண் குழந்தைகளை மட்டும் கொண்ட குடும்பங்கள் ரூ.50,000 பெறலாம். இதன்படி குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தை இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.1,20,0000க்குள் இருக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17540105>>தொடர்ச்சி<<>>