News May 28, 2024
மோடியை விமர்சித்த ஆசிரியை பணியிடை நீக்கம்

உ.பி.,யின் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றுபவர் வர்ஷா. இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடி & முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீது பகையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன், அவரை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
போர் பதற்றம்.. தொடரை தள்ளிவைத்த ICC!

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, நேபாளத்தின் கீர்திபூரில் நடைபெற இருந்த ODI WC லீக்-2 தொடரின் 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ODI உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்காக நடத்தப்படும் இந்த தொடரில் நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத இருந்தன. தொடர் நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ICC அறிவித்துள்ளது.
News March 5, 2026
விஜய்யுடன் யார் பேசுனா? செல்வப்பெருந்தகை

விஜய்யுடன் யாரும் கூட்டணி குறித்து பேசவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அதேநேரம், வேறு யாரேனும் தனிப்பட்டு பேசியிருந்தால், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். திமுக – காங்., தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ள அவர், தற்போது கூடுதலாக 3 + 1 தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
UPDATE: தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியானது

தமிழகத்தில் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது. இந்நிலையில், 2026 தேர்தல் பணிகளை CEC குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இறுதியாக, மேற்கு வங்கத்தில் மார்ச் 9 – 10-ல் நடைபெறுகிறது. இதனால் மார்ச் 10-க்கு பிறகு தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும், குறிப்பாக மார்ச் 13-ல் தேர்தல் தேதி அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


