News May 28, 2024
நடிகை கவுதமி கொடுத்த புகாரில் 13 பேர் மீது வழக்கு

நில மோசடி வழக்கு தொடர்பாக கவுதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அழகப்பன் என்பவர் ₹56 லட்சம் மதிப்புள்ள நிலத்திற்கு தன்னிடம் ₹3.16 கோடி பெற்றதுடன், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 49 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் போட்டு ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அழகப்பனின் உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
Similar News
News August 21, 2025
சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் இல்லை

குண்டும், குழியுமாக இருக்கும் ரோட்டில் பயணிப்பதை விட அதற்கு செலுத்துவது தான் கட்டுவதுதான் கொடுமையானது. இந்த நிலையில்தான், கேரளாவில் சேதமடைந்து இருக்கும் NH-544 சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தரமான சாலை வசதியை NHAI, மக்களுக்கு அமைத்து தர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இது அனைத்து டோல்கேட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்?
News August 21, 2025
ராசி பலன்கள் (21.08.2025)

➤ மேஷம் – அனுகூலம் ➤ ரிஷபம் – வெற்றி ➤ மிதுனம் – பகை ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – மகிழ்ச்சி ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – மேன்மை ➤ விருச்சிகம் – ஆர்வம் ➤ தனுசு – இன்பம் ➤ மகரம் – தேர்ச்சி ➤ கும்பம் – நன்மை ➤ மீனம் – முயற்சி
News August 21, 2025
விந்தணு மூலம் குழந்தைக்கும் பரவும்… ஆய்வில் அதிர்ச்சி!

ஒரு ஆண், சிறு வயதில் அனுபவிக்க நேரும் மன அதிர்ச்சியின் நினைவுகள், மரபணு மூலம் அவரது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மன அதிர்ச்சியின் நினைவுகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் மற்றும் அழற்சி விளைவுகள், அவரின் விந்து செல்களின் மரபணுக்களில் பதிவாகி, அதன்மூலம் அவரின் குழந்தைக்கும் செல்கிறது. இதனால் குழந்தையின் மனநலமும் பாதிக்கலாம் என்கின்றனர்.