News May 28, 2024
செவ்வாய் தோஷம் போக்கும் பாலதண்டாயுதபாணி

அங்காரகனின் நீசப் பார்வையால் ஏற்படும் செவ்வாய் தோஷத்தால் திருமண தடை, கடன் பிரச்னை, தீராத நோய்களால் அவதியுற நேரிடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. செவ்வாய் தோஷத்தால் மனம் வாடுவோர் சத்தியமங்கலம் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு விரதமிருந்து சென்று, முருகனுக்கு செவ்வரளி மலர்மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, துவரை அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட்டாலே போதும் தோஷங்கள் அனைத்தும் விலகிடும் என்பது ஐதீகம்.
Similar News
News March 12, 2026
சிலிண்டர் தட்டுப்பாட்டால் திருமணம் ரத்து

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக திருமண மண்டப உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளது. சிலிண்டர் பற்றாக்குறையால் வந்த திருமண மண்டபங்களில் வந்த விருந்தினர்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்கால அடிப்படையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 12, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல்; செய்வது துணிந்து செய். *காயங்கள் குணமாக காலம் காத்திரு; கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு. *மலையை பார்த்து வியந்துவிடாதே; மலை மீது ஏறினால் அதுவும் உன் காலின் கீழ்தான். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை.. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.
News March 12, 2026
பள்ளத்தில் மோதியதால் திரும்பி வந்த பெண்ணின் உயிர்!

டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்தால் ’மெடிக்கல் மிராக்கிள்’ என சொல்வதுண்டு. அப்படிப்பட்ட மிராக்கிள் சம்பவம் உ.பி.,யில் நடந்துள்ளது. மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட வினீதா சுக்லா என்ற பெண், இறுதிச் சடங்குகளுக்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். வழியில் ஆம்புலன்ஸ் ஒரு பள்ளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வலையில் அதிர்ஷ்டவசமாக அவரது உயிர் திரும்ப வந்துள்ளது.


