News May 28, 2024

கூண்டில் சிக்கிய மரநாய்

image

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் தற்போது ஒரு சில பழைமையான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்கள் கடந்த சில நாட்களாக மரநாய்கள் தொல்லை கொடுத்து வந்தன. இதனால் ஊழியர்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி வேளிமலை வனபாதுகாப்பு அதிகாரிகள் மரநாய்களை பிடிக்க நீதிமன்றவளாகத்தில் கூண்டு வைத்தனர். நேற்று சிக்கிய மரநாயை வனத்துறையினர் மீட்டு சென்றனர்.

Similar News

News April 20, 2025

கல்கத்தாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்றவர் கைது

image

கல்கத்தாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருசடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆரல்வாய்மொழி குருசடி பகுதி சேர்ந்த ஜான் பெஞ்சமின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 230 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News April 20, 2025

இயற்கை மாம்பழத்தை கண்டுபிடிப்பது எப்படி?

image

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *SHARE* பண்ணுங்க

News April 20, 2025

கன்னியாகுமரியின் சிறந்த கோயில்கள் & வழிபாட்டு நேரம்

image

1. குமாரி அம்மன் கோவில்
காலை 4.30 – 12.00 மற்றும் மாலை 4.30 – இரவு 8.00

2.ஆதிகேசவப் பெருமாள் கோவில்,திருவட்டார்
காலை 6.00 – 11.00 & மாலை 5.00 – 8.00

3.திருநந்திக்கரை குகைக் கோயில்,திருவட்டாறு
காலை 5:00 – 11:00 & மாலை 5:00 – இரவு 8:00

4.நாகராஜா கோவில்,கன்னியாகுமரி
காலை 4.00 – 12.00 & மாலை 5.00 – 8.30

5.தாணுமாலயன் கோவில்,சுசீந்திரம்
காலை 4.30 – 12.30 & மாலை 4.30 – 8.30

*ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!