News May 27, 2024

தனியார் நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு

image

குற்றப்பிரிவு போலீசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் உமன்ஸ் பாலிடெக்னிக் அருகில் இயங்கி வந்த Sunmaxs என்ற நிறுவனத்தின் மீதும் அதன் CEO ஆக இருந்த சிவராமகிருஷ்ணன், கீதா என்ற கீதாஞ்சலி ஆகியோர்கள் மீது இன்று கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே Sunmaxs நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் மனு தருமாறு தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 7, 2026

கோவை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,

2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,

3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,

4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,

5. முதியோருக்கான அவசர உதவி : 1253,

6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,

7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 7, 2026

BREAKING: கோவையை உலுக்கிய கொடூரம்.. வந்தது தீர்ப்பு!

image

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 3 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News March 7, 2026

BREAKING: கோவை கூட்டு வன்கொடுமை வெளியான தீர்ப்பு!

image

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்த விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!