News May 27, 2024

சேகுவேரா புத்தகங்களுடன் தீபக் ராஜா உடல் அடக்கம்

image

நெல்லையில் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை 7 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். ஆயிரக்கணக்கான கிராம மக்கள் புடை சூழ, சுமார் 4 மணி நேரமாக அவரது சொந்த ஊராக மூன்றடைப்புக்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு, ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்கள் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Similar News

News November 26, 2025

மலச்சிக்கல் பிரச்னை நொடியில் நீங்கும்..

image

மலச்சிக்கல் பிரச்னைக்காக விலையுயர்ந்த மருந்துகள் எடுத்தும் தீர்வு கிடைக்கலையா? ஆவாரம் பூ இதற்கு ஒரு சிறந்த நிவாரணம் என ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றாங்க. இரவில் தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆவாரம் இலை பொடி, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு இவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். SHARE.

News November 26, 2025

விஜய்யை நம்பமுடியாது: செல்வப்பெருந்தகை

image

தவெக உடன் TN காங்., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யை நம்பி திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளிவர வாய்ப்பில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அந்த தகவல் உண்மை இல்லை என கூறிய அவர், காங்கிரஸில் இருக்கும் சிலர் சொல்வது கட்டுக்கதை என்றார். மேலும், TN-ல் திமுகவின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காங்., செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 26, 2025

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $9 உயர்ந்து, $4,141-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (நவ.25) மட்டும் சவரனுக்கு ₹1,600 உயர்ந்து, ₹93,760-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!