News May 27, 2024
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (70). இவர் ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் லக்காபுரம் கடையில் மருந்து வாங்க நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த அடிபட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 26, 2025
யார் இந்த செங்கோட்டையன்

ஈரோடு, குள்ளம்பாளையத்தை தாயகமாகக் கொண்ட செங்கோட்டையன், 1948ம் ஆண்டு பிறந்தார். அரசியல் பயணத்தை திமுகவில் இருந்து தொடங்கிய அவர், 1972-ல் எம்ஜிஆர் கட்சி உருவாக்கிய போது அவருடன் சேர்ந்து அதிமுகவில் முக்கிய பங்களிப்பை வழங்கினார். 1977-ல் சத்தியமங்கலத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றார். பின், 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016, 2021 என 8 முறை கோபியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 26, 2025
கோபிசெட்டிப்பாளையம் MLA ராஜினாமா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோபி எம்எல்ஏ செங்கோட்டையன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், கோபியில் அவரது வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். செங்கோட்டையன் ராஜினாமா செய்தது, அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
News November 26, 2025
ஈரோடு: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


