News May 27, 2024
திருச்சி அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 4, 2026
திருச்சி: ஆதார் சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி தலைமை தபால் நிலையம் மற்றும் தெப்பக்குளம் துணை தபால் நிலையத்தில், வரும் 28-ம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, ஆதார் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புதிய ஆதார் விண்ணப்பம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 4, 2026
திருச்சி: விவசாயிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,83,115 விவசாயிகளில் 1,33,300 பேர் மட்டுமே பிரதமரின் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் 49,815 பேர் அடையாள எண் பெறாமல் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகள் பதிவை துரிதப்படுத்தும் வகையில் FARMER REGISTRY TN என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விவசாயிகள் தங்களது சிட்டா விவரங்களை தாமாகவே பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


