News May 27, 2024
கம்பு, சோளம், விளைவிக்கலாம்

கோவை வேளாண் இணை இயக்குநர் பெருமாள்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் ஆண்டுக்கு சராசரியாக 609 மி.மீ மழை பெய்கிறது. இந்த ஆண்டு பெய்துள்ள மழைக்கு சோளம், கம்பு, ராகி சாகுபடியினை செய்ய ஏற்ற நிலை நிலவுகின்றது. எனவே விவசாயிகள் இந்த பருவ மழைக்கு இதனை விளைவித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
BREAKING: கோவை கூட்டு வன்கொடுமை வெளியான தீர்ப்பு!

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்த விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
News March 7, 2026
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பழங்குடியின மாணவன் சாதனை.

ஆண்டுதோறும் ரூ.1000 விதம் 4 ஆண்டுகளுக்கு வழங்க நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வு தேர்வு கடந்த டிச.25ல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவன் நாக பிரசாந்த் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
News March 7, 2026
கோவை: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

கோவை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!


