News May 27, 2024
சேலம் மேட்டூர் அணையின் சிறப்புகள்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ்-இன் வடிவமைப்பின்படி ரூ 4.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த அணை மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அனையில் தன்ணீர் திறப்பதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணையின் மொத்த நீளம் 5300 அடி, அதிகபட்ச நீர்த்தேக்கும் உயரம் 165 அடியாகும்.
Similar News
News November 9, 2025
சேலம்: WhatsApp மூலம் பணம் பறிபோகலாம்!

சேலம் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தி குத்து!

சேலம், சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார், இவர் கல்குவாரி உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இது தெரிய வந்ததும், அந்த பெண்ணின் கணவர் சசிகுமாரை மிரட்டி, கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News November 9, 2025
இணைய மோசடிகள் குறித்த புகாருக்கு 1930 அழைக்கவும்!

இணையவழி மோசடி மற்றும் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவொரு இணையவழி சைபர் குற்றத்திற்கும் இரையாகினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.


