News May 27, 2024
நாகை: சாராயம் விற்ற 18 பேர் ஒரே நாளில் கைது!

நாகை நகர டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.
8 எஸ்ஐ தலைமையில் போலீசார் 3 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் மஃப்ட்டியில் மதுவிலக்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாகை உட்கோட்டத்திற்கு உட்பட்ட, திட்டச்சேரி, திருமருகல், வலிவலம் திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சாராய கடத்தல் மன்னன்கள் 4 பேர் உட்பட 18 பேரை அதிரடியாக நேற்று(மே 26) கைது செய்தனர்.
Similar News
News May 8, 2025
நாகை: வனத்துறையில் வேலை!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<
News May 8, 2025
நாகையில் நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
News May 7, 2025
தடைகள் வராமல் இருக்க இங்க போங்க

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழி.பட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.