News May 27, 2024
தீபக் ராஜாவின் உடல் ஒப்படைப்பு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த வாரம் வெட்டி கொலை செய்யப்பட்ட தீபக்ராஜாவின் உடல் இன்று (மே 27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல், போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Similar News
News September 16, 2025
நெல்லை: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <
News September 16, 2025
விகேபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

விக்கிரமசிங்கபுரம் கட்டபொம்மன் காலணியில் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது.குப்பை கிடங்கில் நேற்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த அம்பை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பை கிடங்கில் தீப்பிடித்ததால் அங்கிருந்து கிளம்பிய புகையால் கட்டபொம்மன் காலணியில் உள்ளவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
News September 16, 2025
நெல்லை: விபத்தில் வாலிபர் பலி

நெல்லை, நாங்குநேரி அருகே வடக்கு புளியங்குளத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி நண்பர்கள் இருவருடன் பைக்கில் மேலப்பாளையம் ஆமீன் புறம் 7வது தெரு அருகே சென்றார். அப்போது பைக்கும் லோடு ஆட்டோவும் மோதின. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த மந்திரமூர்த்தி உயிரிழந்தார். விபத்துக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.