News May 27, 2024
கோலி மீது ராயுடு மீண்டும் விமர்சனம்

ஐபிஎல்லில் 741 ரன் குவித்து கோலி ஆரஞ்ச் தொப்பி வென்றுள்ளார். இதை மறைமுகமாக சிஎஸ்கே அணி முன்னாள் வீரர் ராயுடு விமர்சித்துள்ளார். ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஆரஞ்ச் தொப்பி கோப்பையை வென்று தராது, 300 ரன்களே கோப்பையை கைப்பற்றித் தரும் எனக் கூறினார். சுயநலத்துக்காக கோலி விளையாடுவதாக அவர் ஏற்கெனவே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 17, 2025
பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவினார்

BJP, திண்டுக்கல் மேற்கு மாவட்ட Ex செயலாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட 300 பேர் திமுகவில் இணைந்தனர். பழனியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தவெகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். காலை உணவு திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள மகுடீஸ்வரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.
News September 17, 2025
டிரம்ப் ஆதரவாளர் கொலை: இளைஞருக்கு மரண தண்டனை?

டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட டைலர் ராபின்சன் மீது கொலை உள்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைலரை சுட்டுக் கொல்லும் வகையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.<<17683928>> சார்லியை<<>> கடந்த 10-ம் தேதி பொதுவெளியில் வைத்து டைலர் சுட்டுக் கொன்றார்.
News September 17, 2025
PAK vs UAE போட்டியில் நடுவர் மாற்றம்?

IND vs PAK போட்டியில் நடுவராக இருந்த ஆண்டி பைக்ராஃப்டை நீக்காவிட்டால், தொடரில் இருந்து வெளியேறுவோம் என <<17723508>>பாக்.,<<>> எச்சரித்து இருந்தது. இதையடுத்து, இன்றைய போட்டியில் பைக்ராஃப்டிற்கு பதிலாக, ரிச்சி ரிச்சர்ட்சனை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடுவராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அறிவிக்கப்பட்ட படி இன்று PAK vs UAE மோதும் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.