News May 27, 2024

பதிப்புரிமைத் தொகையில் வாழ்ந்த நேரு

image

ஆனந்தபவன் அரண்மனையில் இளவரசனாக பிறந்து, நாட்டின் அரசனாக வாழ்ந்து, துறவியாக இறந்தவர் நேரு. சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த பின், சாகும்வரை தான் எழுதிய புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகையை மட்டுமே தனது ஒரே வருமானமாக அவர் கொண்டிருந்தார். கோர்டு – சூட்டு, சொகுசு மாளிகை, தனி விமானப் பயணம் போன்ற உல்லாச வாழ்வை ஒதுக்கி, நாட்டை முன்னேற்ற உழைத்த நவீன இந்தியாவின் சிற்பி நேருவின் நினைவு தினம் இன்று!

Similar News

News March 19, 2026

‘பாஜக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு சர்ப்ரைஸ்’

image

பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் தேர்தல் அறிக்கை இறுதிசெய்யப்பட்டு, மாநில தலைவர் நயினாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் நயினார் அதனை வெளியிடுவார் எனவும் தமிழிசை கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர், விவசாயிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

News March 19, 2026

நெருங்கும் தேர்தல்.. இந்த போன் நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

image

தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில், வாக்காளர்களாகிய உங்களுக்கு வாக்குச்சாவடி மையத்தை கண்டறிவதில் பல விதமான சந்தேகங்கள் ஏற்படலாம். தேர்தல் விதிமீறல் குறித்த புகார் அளிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையத்தின் 1800-4252-1950 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது 24 மணி நேர சேவையாகும். இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்.

News March 19, 2026

கடன் தள்ளுபடி.. புதிய தேர்தல் அறிவிப்பு

image

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சீமான் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும் *இடஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும் *ஆற்றுநீரை பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்கு தடை விதிக்கப்படும் * 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

error: Content is protected !!