News May 27, 2024

ஜியோ, ஏர்டெல், வோடஃபோனுக்கு அரசு உத்தரவு

image

இந்திய எண்களுடன் வரும் மோசடி வெளிநாட்டு அழைப்புகளை முடக்கும்படி, ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், இந்தியாவில் இருந்து மேற்கொள்வது போல வெளிநாடுகளில் இருக்கும் குற்றவாளிகள், போலி அழைப்புகள் மூலம், சைபர் கிரைம், நிதிமோசடியில் ஈடுபடுவதாகவும், அத்தகைய அழைப்புகளை அடையாளம் கண்டு முடக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News

News September 17, 2025

மோடி என்னும் புயல்!

image

எளிமையான குடும்பத்தில் பிறந்து, உலக அரங்கில் பெரும் தலைவராக உருவெடுத்துள்ள PM மோடிக்கு இன்று பிறந்தநாள். விமர்சனங்கள் இருப்பினும், தொடர்ந்து 3-வது முறையாக மக்களின் நம்பிக்கையை பெற்று தனிபெரும் ஆளுமையாக இருக்கிறார். நாட்டு வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்கள் என பலவற்றிலும் அவரின் ஆட்சியில் பலர் பலனடைந்து கொண்டுதான் இருக்கின்றனர். நீங்க PM மோடியின் ஆட்சியில் பயன்பெற்ற ஒரு திட்டத்தை குறிப்பிடுங்க?

News September 17, 2025

பாஜகவில் இருந்து திமுகவிற்கு தாவினார்

image

BJP, திண்டுக்கல் மேற்கு மாவட்ட Ex செயலாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட 300 பேர் திமுகவில் இணைந்தனர். பழனியில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, பாஜக, தவெகவில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். காலை உணவு திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ள மகுடீஸ்வரனை திமுகவில் இணைத்தது சர்ச்சையாக வெடித்துள்ளது.

News September 17, 2025

டிரம்ப் ஆதரவாளர் கொலை: இளைஞருக்கு மரண தண்டனை?

image

டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட டைலர் ராபின்சன் மீது கொலை உள்பட 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைலரை சுட்டுக் கொல்லும் வகையில் மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.<<17683928>> சார்லியை<<>> கடந்த 10-ம் தேதி பொதுவெளியில் வைத்து டைலர் சுட்டுக் கொன்றார்.

error: Content is protected !!