News May 27, 2024
பைக் மோதியதில் குழந்தை பலி

காரிமங்கலம் அருகே காமலாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்-காவியா தம்பதியினர். இவர்களது 2 வயது குழந்தை ஆதவன், நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த பைக் மோதியதில், பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளித்த நிலையில், மேல் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
Similar News
News August 13, 2025
வேலைவாய்ப்பு கண்காட்சியினை பார்வையிட்ட ஆட்சியர்

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் “மாபெரும் தமிழ்க் கனவு” தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர்ரெ.சதீஸ்,இன்று (13.08.2028) பார்வையிட்டார்கள். உடன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்.மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News August 13, 2025
புனித பயணம் செல்ல மானியம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசால் 2025-2026 ஆம் ஆண்டில் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயனம் செல்ல நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 13, 2025
தர்மபுரி: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <