News May 27, 2024

ராம்நாடு: வாக்கு எண்ணும் மையத்தில் எஸ்ஐ மரணம்

image

ராமநாதபுரம் மாவட்டம்
புல்லந்தையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து, அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

Similar News

News March 12, 2026

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,342 பேர் எழுதினர்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 10-ஆம் பொதுத்தேர்வை 261 தேர்வு மையங்களில் 8,183 மாணவர்கள், 8,588 மாணவிகள், தனித்தேர்வர்களாக 571 பேர் என மொத்தம் 17,342 பேர் தேர்வு எழுதினர். 85 தேர்வு மையங்களில் 105 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

News March 12, 2026

இராம்நாடு: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

இராம்நாடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News March 12, 2026

ராம்நாடு : இனி PAN கார்டு தேவையில்லை..மத்திய அரசு

image

வீடு,மனை போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் என தற்போது உள்ளது. இந்நிலையில்,ரூ.20 லட்சம் வரை சொத்துக்கள் வாங்கினால்,இனி பான் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி,ரூ.20 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு பத்திரபதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இது வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!