News May 27, 2024
திருப்பூரில் விபத்து: நண்பர்கள் பலி!

பொங்கலூர் அருகே தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (23). தொங்குட்டிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்துரு (22). இவர்கள் இருவரும் நேற்று கொடுவாயிலிருந்து அவினாசிபாளையத்திற்கு கியாஸ் சிலிண்டர் எடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு பைக் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவரும் நேற்று உயிரிழந்தனர்.
Similar News
News March 11, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (மார்.11) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 11, 2026
SSLC தேர்வு: 458 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 30,225 மாணவ-மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற முதல் தேர்வை 29,716 பேர் மட்டுமே எழுதினர். பல்வேறு காரணங்களால் 509 பேர் (தகவலின்படி 458 முதல் 509 வரை) தேர்வு எழுத வரவில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
News March 11, 2026
திருப்பூரில் அஞ்சல் துறை சார்பில் கூட்டம்

திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 27-ம் தேதி மதியம் 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் யோசனைகளை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அவர்களுக்கு, உறையின் மேல் ‘DAK ADALAT CASE’ எனக் குறிப்பிட்டு மார்ச் 18-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


