News May 27, 2024

56 அங்குல மார்பு எங்கே போனது?

image

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தபோது, பிரதமர் மோடி மௌனம் காத்து வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். ரோரு நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “நாட்டின் எல்லையைப் பாதுகாக்க நாங்கள் பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் போரிட்டோம். பாஜக ஆட்சியில், சீனா இந்திய நிலப்பகுதியில் வீடுகளை கட்டி வருகிறது. 56 அங்குல மார்பு எங்கே போனது என்றே தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

Similar News

News September 17, 2025

இன்றைய போர்களை கணிக்க முடியவில்லை: ராஜ்நாத் சிங்

image

கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு நடந்து வருகிறது. அதில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்தியல், உயிரியல், கண்ணுக்கு தெரியாத சவால்களை எதிர்கொள்ள நமது ஆயுத படைகள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இன்றைய போர்கள் திடிரென ஏற்பட்டு, கணிக்க முடியாதவையாக மாறுவதாகவும், எனவே நமது எழுச்சித் திறன்கள் போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News September 17, 2025

காலக்கெடு நிறைவு: இன்று முதல் ₹5,000 அபராதம்

image

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இனி புதிதாக தாக்கல் செய்பவர்களை கால தாமதம் என்றே வருமான வரித்துறை எடுத்துக்கொள்ளும். இனி அபராதம் செலுத்தினால் மட்டுமே ITR தாக்கல் செய்ய முடியும். அதன்படி, ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் ₹1,000, ₹5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ₹5,000 செலுத்தி, வரும் டிச.,31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

News September 17, 2025

ஆயுத பூஜைக்கு அருள் தரும் ‘கருப்பு’

image

ஆயுத பூஜை அன்று ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் அன்றே வெளியாக உள்ளதாக கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் செம ஹேப்பியில் இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாய் அபயங்கர் பின்னணி இசை பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!