News May 27, 2024
40 ஆண்டுகளுக்கு பிறகு வாக்களித்த மக்கள்

ஜார்க்கண்டின் தான்பாத் தொகுதிக்குட்பட்ட துண்டி கிராமத்தில் 40 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவின் ஒரு பகுதியாக நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த துண்டி கிராமத்தில் 1984ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் ஒரு சதவீத வாக்குக் கூட பதிவானதில்லை. இந்நிலையில், மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வமாக வந்து ஜனநாயக கடமையை (57%) ஆற்றியுள்ளனர்.
Similar News
News March 5, 2026
மார்ச் 5: வரலாற்றில் இன்று

*1953 – சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நினைவு நாள் *1956 – நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள் *1958 – நடிகர் நாசர் பிறந்தநாள் *1959 – அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சௌஹான் பிறந்தநாள் *1976 – இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் *2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை *2013 – நடிகை ராஜசுலோசனா நினைவு நாள்
News March 5, 2026
‘B-2 Bomber’ பின்னணியில் இந்திய வம்சாவளி

உலகிலேயே பயங்கர போர் விமானமான B-2 Bomber-ஐ ஈரான் மீது USA பயன்படுத்துகிறது. இதன் உருவாக்கத்தில் நோஷிர் கோவாடியா என்ற இந்திய வம்சாவளியின் பங்கும் உண்டு. 1944 மும்பையில் பிறந்த இவர், USA-ல் Aeronautical Eng படித்தார். பிறகு Northrop Grumman என்கிற போர் விமானங்களை உருவாக்கும் கம்பெனியில் பணியாற்றினார். ஆனால், இதுபற்றி சீனாவிற்கு தகவல் தந்ததாக USA கோர்ட் அவருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
News March 5, 2026
எங்குமே ஹிந்தியை திணிக்கவில்லை: எல்.முருகன்

தமிழ் மொழியை மட்டுமே TN-ல் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். <<19294297>>திருச்சி ரயில்வே அலுவலக சர்ச்சை<<>> குறித்த கேள்விக்கு, மத்திய அரசு எங்குமே ஹிந்தியை திணிப்பதில்லை எனக் கூறினார். தமிழ் தான் தொன்மையான மொழி என உலகம் முழுக்க PM மோடி பேசுவதாக குறிப்பிட்ட அவர், திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார்.


