News May 27, 2024
2 முறை ஆரஞ்ச் கேப் பெற்ற ஒரே இந்திய வீரர் கோலி

2024 ஐபிஎல்லில் 15 போட்டிகளில் 741 ரன்களை கோலி குவித்து, அதிக ரன் விளாசியோர் பட்டியலில் முதலாவதாக இருந்தார். 2ஆவது இடத்தில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (583 ரன்கள்) இருந்தார். இதனால் ஆரஞ்ச் தொப்பியுடன் ரூ.10 லட்சம் கோலிக்கு அளிக்கப்பட்டது. இதன்மூலம் 2ஆவது முறை ஆரஞ்ச் தொப்பி வென்ற இந்திய வீரர் என்ற சாதனை புரிந்தார். ஏற்கெனவே 2016இல் 973 ரன் குவித்து ஆரஞ்ச் தொப்பி பெற்றிருந்தார்.
Similar News
News September 5, 2025
சச்சின் மகளுக்கு நிச்சயதார்த்தம்?

சச்சினின் மகள் சாரா டெண்டுல்கரின் நிச்சயதார்த்தம் தொடர்பான செய்தி வைரலாகி வருகிறது. கோவாவைச் சேர்ந்த ரெஸ்டாரண்ட் ஓனர் சித்தார்த் உடன் சாரா நெருக்கமாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை குறிப்பிட்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுகுறித்து சச்சின் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
News September 5, 2025
ஷில்பா ஷெட்டி, அவரது கணவருக்கு லுக்அவுட் நோட்டீஸ்

₹60 கோடி மோசடி வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ்குந்தராவிற்கு எதிராக மும்பை போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தன்னிடம் இருந்து வாங்கிய ₹60 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றியதாக தீபக் கோதாரி என்பவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தம்பதி அடிக்கடி வெளிநாடு செல்வதால், வழக்கு விசாரணை சுமூகமாக நடப்பதற்கு ஏதுவாக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
இந்தியர்களை வம்பிழுத்த USA நிர்வாகி.. இந்தியா சாடல்

மலிவு விலை ரஷ்ய கச்சா எண்ணெயால் பிராமணர்களே பலனடைவதாக டிரம்பின் பொருளாதார ஆலோசகர் நவரோ தெரிவித்த கருத்தை, இந்தியா நிராகரித்துள்ளது. இது பொய்யான தகவல் எனவும், மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் சாடியுள்ளது. மேலும், USA உடனான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, நவரோவின் கருத்துக்கு பாஜகவும், காங்கிரசும் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தன.