News May 27, 2024
மதுரை: ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ கவியரங்கம்

மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நேற்று(26.05.2024) மா மதுரைக் கவிஞர் பேரவை சார்பில் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது. செயலர் கவிஞர் இரா.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைவர் இரா.வரதராஜன் எழுதிய சரித்திர நாயகர்கள் கவிதை நூலை வெளியிட்டனர். முனைவர் ஸ்ரீ வித்யா பாரதி த.மு.எ.க.ச செயலர் ஜி.பாலசுப்ரமணியன், பறம்பு நடராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 10, 2025
மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக கோரிப்பாளையம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, ஆரப்பாளையம் பஸ் நிலைத்திலிருந்து வைகை வடகரை வழியாக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் செல்லும் நகர, புறநகர் பஸ்கள் தத்தனேரி மேம்பாலம், கபடி ரவுண்டானா, பாலம் ஸ்டேசன் வழியாக செல்லவேண்டும்.ஆவின் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பஸ் நிலையம் செல்லும் நகர் பஸ்கள் குருவி ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
News July 10, 2025
மதுரையில் ரூ.37 ஆயிரத்தில் வேலை வாய்ப்பு

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் SHRI திட்டத்தின் கீழ் நடைபெறும் “மதுரையின் சித்திரை விழா ஆடைகள், நடனங்கள் மற்றும் சடங்குகளை பாதுகாப்பதற்கான ஆவணப்படுத்தல் மற்றும் வகைப்பாடு” என்ற ஆராய்ச்சி திட்டத்திற்காக, ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (JRF) மற்றும் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட்/புலத் தொழிலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
News July 10, 2025
மதுரையில் ஒரே நாளில் 2149 பேர் கைது

மதுரையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உட்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்த முன் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., உட்பட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 846 பெண்கள் உட்பட 2149 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.