News May 27, 2024
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மீது தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2018 – 2019 ஆம் நிதி ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய 3 உதவிப் பொறியாளர்கள், ஒரு செயற் பொறியாளர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Similar News
News November 28, 2025
நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது ஏன்?

1950-ல் இருந்துதான் காயின்கள் வட்ட வடிவத்தில் தயாரிக்கப்படுகின்றன. இது எதார்த்தமாக நடந்த மாற்றம் இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ➤வட்ட வடிவ காயின்களை செய்வது எளிது, பொருள் செலவும் குறைவு ➤வட்ட வடிவ காயின்கள் உருளும் என்பதால் மெஷின்களில் சிக்கிக்கொள்ளாது ➤கூர்மையான முனைகள் இல்லாததால் காயின்கள் சேதமடையாது. 99% பேருக்கு இது தெரியாது, SHARE THIS.
News November 28, 2025
IPL-க்கு வைபவ்.. WPL-க்கு தியா யாதவ்!

ஹரியானாவை சேர்ந்த தியா யாதவ்(16) WPL ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரை டெல்லி அணி ₹10 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. 2023 U15 மகளிர் WC தொடரில் 578 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் பெற்ற தியா, WPL தொடரில் விளையாடப்போகும் இளம் வீராங்கனை என்ற பெருமையை பெறவுள்ளார். இளம் வயதிலேயே WPL-லில் விளையாடவுள்ளதால், IPL-க்கு வைபவ்(13), WPL-க்கு தியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News November 28, 2025
மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் லீவு

‘டிட்வா’ புயல் எதிரொலியால் தி<<18410367>>ருவாரூர், மயிலாடுதுறையை <<>>தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் வேகமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று(நவ.28) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. SHARE IT.


