News May 26, 2024
நகைக் கடை உரிமையாளரிடம் ₹26 கோடி பறிமுதல்

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள சுரானா ஜுவல்லர்ஸ் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் ₹26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகைக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு தொழில்களில் சுரானா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
ராகுலை புகழ்ந்த EX பாக்., வீரர்: பாஜக விமர்சனம்

ராகுல் காந்தியை EX பாக்., கிரிக்கெட் வீரர் <<17729515>>அஃப்ரிடி<<>> பாராட்டியதை பாஜக விமர்சித்துள்ளது. பாகிஸ்தானின் செல்லப் பிள்ளையாக ராகுல் மாறிவிட்டதாகவும், அந்த மக்கள் அவரை தலைவராக ஏற்க கூட தயக்கம் காட்ட மாட்டார்கள் என்றும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சாடியுள்ளார். இதற்கு, அஃப்ரிடியுடன் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காங்., பதிலடி கொடுத்துள்ளது.
News September 17, 2025
பெரியார் பொன்மொழிகள்

*மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. *பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு. *தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும். *ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அதேபோல் மற்றவர்களிடமும் அவன் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். *கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
News September 17, 2025
USA வர்த்தக பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

<<17712326>>இந்தியா – அமெரிக்கா<<>> இடையே நேற்று நடந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிற்கும் பலனளிக்கும் விதமாக ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என இருநாடுகளும் விரும்புவதாகவும் கூறியுள்ளது. வேளாண் மற்றும் பால்பண்ணை துறைக்கான சந்தையை அமெரிக்காவிற்கு திறக்க சில நெகிழ்வுத்தன்மைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.