News May 26, 2024
இலங்கை அரசியல் களத்தில் மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலுக்கு எதிராக மக்கள் 2022ஆம் ஆண்டில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில், தற்போது மீண்டும் நாடு திரும்பியுள்ள அவர்கள், இன்று மாலை எஸ்எல்பிபி கட்சி மாநாட்டில் பங்கேற்று அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளனர்.
Similar News
News September 17, 2025
நீங்க எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பாக்குறீங்க?

காலை அலாரம் அடித்தவுடன் எழுந்திருப்பதில் தொடங்கி, இரவு தூங்கும் வரை டிஜிட்டல் ஸ்கிரீனை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால், வெறும் 1 மணி நேரம் ஸ்கிரீன்களை பார்ப்பதாலேயே Myopia எனும் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும் அபாயம் 21% உள்ளதாக JAMA Network Open ஆய்வில் தெரியவந்துள்ளது. 3.35 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. நீங்க எவ்வளவு நேரம் ஸ்கிரீன் பாக்குறீங்க?
News September 17, 2025
PM மோடிக்கு நண்பர் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து

PM மோடிக்கு தொலைபேசி மூலம் டிரம்ப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து PM தனது X பக்கத்தில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நண்பர் டிரம்பிற்கு நன்றி எனவும், உக்ரைனில் அமைதி நிலவ அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். வரிவிதிப்பு விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
ஜெயிலர் 2 படத்தின் டபுள் அப்டேட்

உண்மையிலேயே ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க தான் ஆசைப்பட்டேன், ஆனால் அது நடக்கவில்லை என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள நெல்சன், இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும், இதற்கு மேல் சொல்லி ஹைப் ஏற்ற விரும்பவில்லை என கூறியுள்ளார். சமீபத்தில் ‘கூலி’ படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.