News May 26, 2024
நான்குவழிச் சாலையில் எரியாத விளக்குகள்

தூத்துக்குடி – எட்டையபுரம் 4 வழிச்சாலையில் ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரியின் வடபுரத்தில் சுமார் 1 கிமீ தூரத்திற்கு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையில் ஹீண்டாய் ஷோரூம் வரை கடந்த 10 நாட்களுக்கு மேலாக சாலை விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் அளித்துள்ளனர். பெரும் விபத்து ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News March 4, 2026
தூத்துக்குடி: கொலை வழக்கில் சிறுவனுக்கு நூதன தண்டனை

விளாத்திகுளம் குருவார்பட்டி சேர்ந்த முருகன் கடந்த 2018-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது தூத்துக்குடி இளம் சிறார் நீதிக் குழும முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் இளம் சிறார் 3 ஆண்டுகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் 8 மணி நேரம் சேவை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
News March 4, 2026
அமைச்சரின் சொத்து குறிப்பு வழக்கு ஓத்திவைப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கினை மார்ச்.7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 3, 2026
தூத்துக்குடி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


