News May 26, 2024
கடலூர் அருகே ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரி செய்வதற்கு இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. படகு சவாரி செய்வதற்கான டோக்கன் கொடுப்பதை பகல் ஒரு மணியோடு நிறுத்தி விட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது. வரும் வழியிலேயே சுங்க சாவடியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் திரும்பி செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News March 10, 2026
கடலூர்: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 300 மாணவர்கள் ஆப்சென்ட்

கடலூர் மாவட்டத்தில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 30 ஆயிரத்து 83 மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், மொத்தமாக 300 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில் 29 ஆயிரத்து 783 மாணவர்கள் மட்டும் தேர்வெழுதினர்.
News March 10, 2026
காரைக்காடு: தொழிலாளி உயிரை பறித்த நாய்

கடலூர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி செல்வம்(58). இவர் பைக்கில் சின்னபிள்ளையார்மேடு பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் திடீரென பிரேக் பிடித்தார். இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த செல்வம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
News March 10, 2026
கடலூர்: காவல்துறை அத்துமீறுகிறதா? MLA கேள்வி

பண்ருட்டி MLA வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மானாமதுரை பகுதியில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் ஆகாஷ் டெல்சன் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. என தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை அத்துமீறுகிறதா? இளைஞர் ஆகாஷ் மரணத்திற்கு யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார்.


