News May 26, 2024

2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

தமிழகத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பழவேற்காடு, எண்ணூர் கடலோர மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 7, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருவள்ளூர் காவல் துறை தனது சமூக வலைத்தளத்தில் வேலை வாய்ப்பு மோசடிகள் பொதுவாக உண்மையான வேலை வாய்ப்புகளைப் போல தோன்றும், ஆனால் அவை பணம், மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News July 7, 2025

திருவள்ளூரில் பொறியியல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

image

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் பொறியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கான திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருவள்ளூரில் மகளிருக்கான தொழில் விழிப்புணர்வு

image

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜூலை 10ம் தேதி நடைபெறும் மகளிருக்கான தொழில் நெறிவழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மகளிர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!