News May 26, 2024

வழி தவறிய குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

image

கரூரில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வரும் சரவணன்-மோனிகா தம்பதியரின் 2 வயது குழந்தை பெரிஸ் பிளாசா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். இதில் குழந்தை தனியாக கோவை சாலையில் வந்ததை கண்ட போக்குவரத்து காவலர்கள் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தையை தேடிக் கொண்டிருந்த அவர்களை மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கி குழந்தையை பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

Similar News

News November 7, 2025

கரூரில் திணறும் வியாபாரிகள்!

image

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய ஜவுளி பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதித்துள்ளார். இதன் காரணமாக காரணமாக தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் என்று அழைக்கப்படும் கரூரில் 150க்கு மேற்பட்ட பிரிண்டிங் நிறுவனங்கள் ஆர்டர் இல்லாமல் திணறி வருகின்றனர்.தமிழக அரசு இவ்வாறு வேலை இல்லாமல் தவிக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் பிரிண்டிங் பிரஸ் உரிமை யாளர்களுக்கும் மானிய விலையில் கடன் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

News November 7, 2025

கரூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். (SHARE)

News November 7, 2025

கரூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே, மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!