News May 26, 2024
வானில் நடைபெறவிருக்கும் அதிசயம்

ஜூன் 3ஆம் தேதி மற்றும் ஜூன் 4ஆம் தேதிக்கு இடையே வானில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் அதிசயம் நிகழவுள்ளது. வெள்ளிக் கோளைத் தவிர மற்ற அனைத்தையும் ஒரே நேர் கோட்டில் வானில் பார்க்கலாம். 6 கோள்கள் ஒரே நேரத்தில் வானில் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவை ஒரே நேர் கோட்டில் தோன்றுவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இவற்றைப் பார்ப்பதற்கு தொலைநோக்கி அவசியமாகும்.
Similar News
News August 20, 2025
BREAKING: தவெக மாநாட்டுக்கு புதிய சிக்கல்

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிகளை 1 மணிநேரத்திற்குள் அகற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது, தொடர்பாக ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளின் கொடிகள், பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
News August 20, 2025
PM, CM பதவி பறிப்பு மசோதா: ஸ்டாலின் கண்டனம்

30 நாள்கள் சிறையில் இருந்தால், PM, CM பதவியை பறிக்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒரு கருப்பு நாள், கருப்பு மசோதா என குறிப்பிட்ட அவர், இதுவே சர்வாதிகாரத்தின் தொடக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வாக்கு திருட்டு விவகாரத்தை திசைதிருப்பவே இம்மசோதா கொண்டுவரப்பட்டதாகவும், ஜனநாயகத்தை அழிக்கும் மசோதா என்றும் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
ரஷ்ய கச்சா எண்ணெயால் யாருக்கு லாபம்?

ரஷ்யாவிலிருந்து <<17464064>>மலிவு விலையில்<<>> வாங்கும் கச்சா எண்ணெயால், உண்மையில் பலனடைவது யார்? பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்காததால், அதன்மூலம் அரசும், தனியார் நிறுவனங்களும் நேரடியாக லாபமடைகின்றன. மேலும், அதிக விலைக்கு ஏற்ப, வரியும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. தவிர, இந்த எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோலிய பொருள்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தனியார் நிறுவனங்கள் கூடுதல் லாபம் பார்க்கின்றன. மக்களுக்கு?