News May 26, 2024
நாய்கள் கடித்ததில் மான் பலி

பேரணாம்பட்டு எருக்கம்பட்டு வனப்பகுதியில் இருந்து வழி தவறி மான் ஒன்று நேற்று வந்துள்ளது. மானை அங்கிருந்த நாய்கள் விரட்டி சென்று கடித்துள்ளது. இதை அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் வினோத் என்பவர் மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காயமடைந்த மானுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மான் இறந்தது.
Similar News
News March 4, 2026
வேலூர் கலெக்டர் ஆபீசில் முக்கிய ஆலோசனை!

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.3) அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
வேலூர் கலெக்டர் ஆபீசில் முக்கிய ஆலோசனை!

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.3) அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
வேலூரில் கருத்து கேட்ட திமுகவினர்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், வியாபார சங்கத்தினர் தங்களுக்கு தேவையான கோரிக்கை மனுவை தேர்தல் தயாரிப்பு குழுவிடம் அளித்தனர்.


