News May 26, 2024
நாமக்கல்: மானிய விலையில் விதைகள் வழ்ங்கல்

நாமக்கல் வட்டாரத்தில் தற்போது மழை பெய்துள்ளதால் விவசாயிகள் கோடை காலத்தில் நீர் தேவை குறைவாக உள்ள சோளம்,உளுந்து,எள்,நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டு வருமானம் பெறலாம். இதற்காக கோடை பயிர் சாகுபடித் திட்டம் 590 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்திற்கு தேவையான விதைகள் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படுகிறது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா கூறியுள்ளார்
Similar News
News October 30, 2025
வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை!

நாமக்கல் மாவட்டத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் அணுகலாம்
News October 30, 2025
நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News October 30, 2025
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது. அதே போல், முட்டை கோழி கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை ரூ. 2 குறைக்கப்பட்டு, தற்போது கிலோ ரூ.108-ஆக சரிவடைந்துள்ளது.


