News May 26, 2024

கரூர் அருகே 6 பேர் கைது

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா துளிப்பட்டியில் உள்ள நாடக மேடையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன், கருப்பையா, காளியப்பன், இளங்கோவன், சக்திவேல், கைலாசம் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ.150 பறிமுதல் செய்தனர்.

Similar News

News May 8, 2025

கரூர் மாவட்ட தாசில்தார் தொடர்பு எண்கள்!

image

▶️கரூர் தாசில்தார் – 04324-260745. ▶️அரவக்குறிச்சி தாசில்தார் – 04320-230170. ▶️குளித்தலை தாசில்தார் – 04323-222015. ▶️கிருஷ்ணராயபுரம் தாசில்தார் – 04323-243366. ▶️மண்மங்கலம் தாசில்தார் – 04324-288334. ▶️கடவூர் தாசில்தார் – 04323-251444. ▶️புகளூர் தாசில்தார் – 04324-270370. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News May 8, 2025

கரூரில் ரேஷன் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் வரும் மே.10ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற்றவுள்ளது. கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

News May 8, 2025

கரூரில் குரூப் – 4 இலவச பயிற்சி வகுப்பு!

image

கரூர்: வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!