News May 26, 2024
விருதுநகர் அருகே பைக் சாகசத்தால் நேர்ந்த பரிதாபம்!

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி பகுதியில் இன்று மாலை பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இளைஞர் கருப்பசாமி தன் நண்பருடன் பைக்கில் சாகசம் செய்தபடி பேருந்தின் முன்பக்கத்தில் மோதினார். இதில் கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
விருதுநகர்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

விருதுநகர் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
விருதுநகர்: பீரோவை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (37). இவர் சில மாதங்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்க்கையில் இவரது வீட்டில் இருந்த 40 பவுன் நகையை மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருடியது தெரியவந்தது. இது குறித்த புகாரில் மதுரையை சேர்ந்த சகாயலூர்துராசு (28), ஜராவதநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கர் (28) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகைகளை மீட்டனர்.
News March 10, 2026
விருதுநகர்: மயானத்தில் பேரதிர்ச்சி சம்பவம்

விருதுநகரை சேர்ந்த தெய்வேந்திரன்(58), கரூரை சேர்ந்த ஆனந்தராஜ்(66) ஆகியோர் மதுரை G.H-ல் உயிரிழந்தனர். இவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்கள் முகத்தை கூட பார்க்காமல் உடலை வாங்கி சென்றுள்ளனர். விருதுநகர் மயானத்தில் முகத்தை பார்த்தபோது தான் உடல் மாறியது தெரியவந்தது. பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று அதிகாலை உடல்கள் மீண்டும் சரியான உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


