News May 26, 2024

ஒடிசாவை ரிமோட் மூலம் இயக்கும் தமிழ்நாடு: ஸ்மிருதி

image

ஒடிசாவில் தேர்தல் பரப்புரையில் தமிழ்நாட்டை குறிப்பிட்டு ஸ்மிருதி ராணி பேசியது பேசுபொருளாகியுள்ளது. ஒடிசாவில் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ஒதுக்கும் நிதியை, தமிழ் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் பிஜு ஜனதா எம்பி., மற்றும் எம்எல்ஏ.,க்கள் அந்தப் பணத்தை கொள்ளையடிக்கின்றனர் என விமர்சித்துள்ளார். மேலும், அந்த தமிழ் ரிமோட் கண்ட்ரோலை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் கூறியுள்ளார்.

Similar News

News March 14, 2026

அண்ணாமலை கேட்கும் தொகுதியை கொடுக்காத EPS

image

வரும் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட அண்ணாமலை விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதிதான் தர முடியும்; வேண்டுமானால், கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட பல்லடம் தொகுதியில் போட்டியிடட்டும் என EPS கூறுகிறாராம். அதேபோல், வேளச்சேரியில் போட்டியிட தமிழிசை விரும்பும் நிலையில், விருகம்பாக்கம் (அ) மயிலாப்பூர் தொகுதியை கொடுக்க EPS முன்வந்துள்ளாராம்.

News March 14, 2026

தமிழ்நாடு தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

image

TN உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க நாளை வரை ECI அவகாசம் வழங்கியுள்ளது. அதேபோல், பிஹார், ஒடிசா, ஹரியானாவில் ராஜ்யசபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதனால், நாளை தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பில்லை; 16-ம் தேதிக்கு பிறகே அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 14, 2026

மார்ச் 16-ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

image

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, மார்ச் 16-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இதுவரை தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை. சீட் பேரத்தில் இழுபறி நீடிப்பதாலேயே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பாஜகவுக்கு EPS பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!