News May 25, 2024
900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவால் இப்பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என பள்ளிக்கல்வித்துறை கூறுகிறது. இந்நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படுவதால், உடனே இப்பணியிடங்களை நிரப்புமாறு ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 10, 2026
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… தடுமாறும் அண்டை நாடுகள்

மேற்காசிய போர் சூழலால் பல நாடுகளும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு, விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வங்கதேசத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை, பெட்ரோல்- டீசல் விற்பனைக்கு வரம்பு என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை, 4 நாள் அலுவலக வேலை, 50% அரசு ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வரவேண்டும், கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
News March 10, 2026
லாக்டவுன் போல மாறும் சூழல்..

போரினால் உலகளவில் கச்சா எண்ணெய், கேஸ் & பெட்ரோலிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் ஹோட்டல்கள் மூடப்படுகின்றன, விடுதிகளில் மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக நிறுவனங்கள் WFH ஆப்ஷனையும், பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளையும் கொண்டுவரலாம். ஏற்கெனவே பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் WFH நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
News March 10, 2026
கர்ப்பிணிகளே, இதனால் உங்க குழந்தைக்கு ஆபத்து!

உண்ணும் உணவு, தண்ணீர் வழியாக தினம் தினம் மனிதனின் உடலில் லட்சக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்த வரை அனைவரும் (குறிப்பாக கர்ப்பிணிகள்) பிளாஸ்டிக் பொருள்களை தவிருங்கள். இல்லையென்றால் அவை உங்கள் ரத்தத்தில் கலந்து தாய்ப்பால் வழியாக உங்கள் குழந்தையின் உடலுக்குள் செல்லும். அடுத்த தலைமுறையை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.


